காரைநகர் கடலில் மூழ்கிய சகோதர மொழி பேசுபவரை காப்பாற்றிய பொலிஸார்!
காரைநகர் கடலில் மூழ்கிய சகோதர மொழி பேசுபவரை காப்பாற்றிய பொலிஸார்!
நேற்றையதினம் காரைநகர் கடலில் குளித்துக்கொண்டிருந்து 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை காப்பாற்றினர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவினர் சுற்றுலா வந்தனர். சுற்றுலா வந்த அவர்கள் காரைநகர் கடலில் நீராடிக் கொண்டு இருந்தவேளை குறித்த நபர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸாரான வினோதன் மற்றும் வேரகொட ஆகியோர் அவரை தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.